கீழாநெல்லியின் இலைகளில் 'பில்லாந்தின்' என்னும் மூலப்பொருள் இருப்பதால், இதன் இலைகளில் கசப்புச்சுவை மிகுதியாக இருக்கும். பொட்டாசியம் சத்து அதிகமாகக் காணப்படும் தாவரங்களில் கீழாநெல்லியும் ஒன்று. இலைகளுக்குக் கீழே நெல்லிக்காயின் சிறிய வடிவமாக இதன் காய்கள் இருப்பதால்தான் இதை 'கீழாநெல்லி' என்று அழைக்கிறார்கள்.
கீழாநெல்லியின் மருத்துவக் குணங்கள்:
1.மஞ்சள் காமாலை நோயைச் சரிசெய்யும். மஞ்சள் காமாலைக்கு மிகச்சிறந்த மருந்து கீழாநெல்லியே.
2.இதற்கு சிறுநீரைப் பெருக்கும் சக்தி உண்டு.
3.கண் சம்பந்தமான நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கும்.
4.தீராத தலைவலியைத் தீர்க்கும் வல்லமை கீழாநெல்லிக்கு உண்டு.
5.இது கல்லீரல் சம்பந்தமான நோய்களைக்கூடச் சரிசெய்யும்.
6.சொறி, சிரங்கு போன்ற பிணிகளைப் போக்கும்
7.மலட்டுத் தன்மையைப் போக்கும்.
8.சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்தும் சக்தி கீழாநெல்லிக்கு உண்டு.
9.சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும்.
10.கூந்தல் சம்பந்தமான பிரச்னைகளிலிருந்து நம்மை விடுவிக்கும்.
கீழாநெல்லியை எடுத்துக்கொள்ளும் முறை:
மஞ்சள் காமாலை
கீழாநெல்லி இலையைப் பறித்து நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். சுத்தமான இலையை நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும். இதனுடன் எலுமிச்சைப் பழச்சாறு மற்றும் மோருடன் கலந்து குடித்து வந்தால் மஞ்சள் காமாலை குணமாகும். மேலும் ஹெப்படைட்டிஸ் ‘பி’ மற்றும் ‘சி’ ஆல் உண்டாகும் கல்லீரல் பாதிப்புகளிலிருந்து நம்மைக் காக்கும்.
சர்க்கரை நோய்
உலர்ந்த கீழாநெல்லிப் பொடியை மூன்று வேளையும் உணவுக்கு முன்பாக எடுத்துக்கொண்டால் சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும். சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பாதிப்புக்களைத் தடுத்து டயாலிஸிஸ் செய்வதிலிருந்து நம்மைக் காக்கும்.
உடற்சூடு மற்றும் தொற்றுநோய்கள்
கீழாநெல்லியின் வேரை நன்றாக அரைத்து பசும்பாலுடன் கலந்து மூன்று வேளையும் குடித்துவந்தால், உடல் குளிர்ச்சி அடையும். தொற்று நோய்கள் நெருங்காது.
No comments:
Post a Comment