வீட்டின் துர்நாற்றத்திற்கு உதவும் ஆரஞ்சு பழத்தின் விதைகள். விதைகளில் மறைந்துள்ள நன்மைகளை அறிந்துகொள்ளுங்கள். - HEALTH TIPS AND GENERAL NEWS | EDUCATION DEPARTMENT FLASH NEWS |

Home Top Ad

Post Top Ad

https://t.me/joinchat/NY8iCBcU-6hUiJ817Gy1qg

Sunday 23 August 2020

வீட்டின் துர்நாற்றத்திற்கு உதவும் ஆரஞ்சு பழத்தின் விதைகள். விதைகளில் மறைந்துள்ள நன்மைகளை அறிந்துகொள்ளுங்கள்.


உடலுக்கு பிரெஷ் ஜூஸ் மிகவும் நல்லது அதுவும் வெயில் காலத்தில் தினமும் ஒரு பிரெஷ் ஜூஸ் குடித்தால் உடல் சூடு குறையும் வாய்ப்புள்ளது. நாம் பொதுவாக பழங்களை ஜூஸ் போட்டு விட்டு அதன் விதைகளை தூக்கி வீசி விடுவோம் ஆனால் அந்த விதைகளும் சில பலன்கள் நமக்கு கிட்டும். அப்படி என்ன பலன்கள்.?
குறிப்பாக ஆரஞ்சு பழத்தின் விதைகள் நம் உடலுக்கு தேவையான ஆற்றலை கொடுப்பது முதல் கூந்தல் பராமரிப்பிற்கு உதவுகின்றன.

பழங்களில் பல வகைகள் இருந்தாலும் ஒரு சில பழங்கள் மட்டும் உலகளவில் மிகவும் பிரசித்தி பெற்று விளங்குகின்றன. அப்படியான ஒரு பழம் தான் "ஆரஞ்சு" பழம். தமிழில் இப்பழத்தை கமலா பழம் என்றழைக்கின்றனர். ஆசிய கண்டதை சார்ந்த இந்த பழம் தற்போது உலகம் முழுவதும் உள்ள மக்கள் பயிரிட்டு வளர்த்து ஆரஞ்சு பழங்களை சாப்பிடுகின்றனர். ஆரஞ்சு பழத்தை உண்டால் நம் உடலில் என மாற்றம் ஏற்படும்..?
  • ஆண்களுக்கு ஆரோக்கியமான விந்தணுக்கள் உருவாகும்.
  • ஆரஞ்சு பழங்களில் பொட்டாசியம் சத்தும் அதிகம் உள்ளதால் இதய நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.
  • வாயில் துர்நாற்றத்தை குறைக்கும்.
  • இந்த பழத்தில் உள்ள வைட்டமின் "எ" வால் கண்பார்வை மங்குதல், மாலை கண் நோய் போன்றவைகளுக்கு நல்லது.
  • ஆரஞ்சு பழத்தை சாப்பிடும் நபர்களுக்கு தோலில் மினுமினுப்பு தன்மை அதிகரித்து இளமை தோற்றத்தை உண்டாக்கும்.
  • உடலில் உள்ள எலும்புகளை உறுதியாக்கும்.
  • சிறுநீரக பிரச்சனைகள் நீங்கும்.
ஆரஞ்சு பழத்தை போல ஆரஞ்சு விதைகளும் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்ற தன்மை வாய்ந்தது. ஆரஞ்சு விதைகளை உண்ணும் போது நம் உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைக்கிறது. எனவே அந்த வகையில் ஆரஞ்சு விதைகளும் நமக்கு எந்தெந்த வகைகளில் பயன்படுகிறது.?

  • உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்..
ஆரஞ்சு விதைகள் நம் உடலுக்கு அதிக அளவு ஆக்ஸிஜனேற்றிகளை கொடுக்கிறது. தினமும் காலையில் ஆரஞ்சு ஜூஸ் தயாரிக்கும் பொழுது அதன் விதைகளையும் சேர்த்து உட்கொண்டால் நம் உடலுக்கு நீரேற்றமும் புத்துணர்ச்சியும் அளிக்கிறது. மேலும் இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்கள் ஆரோக்கியமான உடலை உறுதிப்படுத்தவும், உயிரணுக்களை சேதப்படுத்தும் ப்ரீ ரேடிக்கலை தடுக்கவும் உதவுகிறது.
  • வீட்டில் உள்ள கெட்ட துர்நாற்றங்கள் நீங்கும்.
ஆரஞ்சு விதைகளிலிருந்து பிரித்தெடுக்கப்படும் அத்தியாவசிய எண்ணெய் கேக், கூல்டிரிங்ஸ் போன்ற பொருட்களுக்கு சுவைகளை வழங்க உதவுகிறது. இந்த எண்ணெய்யை கொண்டு உங்க வீட்டிற்கும் மணம் சேர்க்கலாம். இந்த அத்தியாவசிய எண்ணெய்யை குளியல் தொட்டியில் கலந்து சிட்ரஸ் வாசனையை ஏற்படுத்தலாம் அல்லது டிஃப்யூசர் மூலம் வீட்டில் இந்த வாசனையை பரவ செய்யலாம். இந்த நறுமணம் உங்க வீட்டில் வீசும் கெட்ட துர்நாற்றத்தை விரட்ட உதவுகிறது.
  • கூந்தல் வளரும்.
ஆரஞ்சு விதைகளில் வைட்டமின் "சி" அதிக அளவில் இருப்பதால் உச்சந்தலையில் அது ரத்த ஓட்டம் ஏற்பட உதவும். அதனால் அது ஆரோக்கியமான மற்றும் வலுவான கூந்தலை உருவாக்க உதவுகிறது.

  • சுத்திகரிப்பானாக பயன்படுத்தலாம்.
ஆரஞ்சு விதைகள் சிறந்த சுத்திகரிப்பானாக செயல்படுகிறது. ஆரஞ்சு விதைகளிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் சுத்தம் செய்யும் போது ஒரு சிறந்த துப்புரவு முகவராக செயல்படுகிறது. கிரீசிங் இயந்திரங்கள், உலோகம், துப்புரவு பாத்திரங்கள் மற்றும் பலவற்றை சுத்தம் செய்ய இதை பயன்படுத்தலாம்.

No comments:

Post a Comment

Post Top Ad