
வீட்டில் தீபம் ஏற்றி வழிபாடு
இப்படிபட்ட அமைப்பில் உள்ள வீடுகளில் எப்போதும் ஏதாவது குறையோ தோஷமோ இருந்து கொண்டே இருக்கும். இப்படிபட்ட தோஷங்கள், குறைகள் நீங்க வீட்டின் நான்கு மூலையிலும் ஒரு விளக்கு என நான்கு விளக்கு பைரவரை நினைத்து கொண்டு 90 நாட்களுக்கு விளக்கு ஏற்ற வேண்டும் .
90 நாள் என்பது ஒரு கணக்கு தான் நமக்கு இப்போ ஓரளவு பரவாயில்லை பிரச்னை
இல்லை அப்படின்னு நாம் உணரும் வரை விளக்கு போட்டு வரலாம். வாழ்நாள்
முழுமையும் கூட விளக்கு போடலாம்.
ஒருவேளை வீட்டுக்கு காம்பவுண்ட் சுவற்றுக்குள் விளக்கு போட்டால் யாரவது
எதாவது நினைப்பார்கள் என்று நினைத்தால், வீட்டுக்கு உள்ளேயே நான்கு
மூலைக்கும் விளக்கு ஏற்றலாம் , விளக்கு எரிந்து முடியும் வரை கவனமாக இருக்க
வேண்டும்.
விளக்கு ஏற்றும் போது பைரவர் கவசம் / பைரவர் காயத்ரி / பைரவர் ஸ்லோகம் /
ஸ்துதி / பைரவர் போற்றி என ஏதாவது ஒன்றை சொல்லிக்கொண்டே விளக்கு ஏற்றலாம்.
இவ்வழிபாட்டினை ஆரம்பிக்கும் முன் பைரவர் கோவிலுக்கு சென்று அங்கு
விநாயகருக்கு ஒரு விளக்கு ஏற்றி பிறகு பைரவருக்கு ஒரு விளக்கேற்றி
அனுமதியும் ஆசிர்வாதமும் பெற்று பிறகு வீட்டிற்கு வந்து விநாயகரை வணங்கி
அவருக்கும் ஒரு விளக்கேற்றிய பிறகே பைரவரை நினைத்து விளக்கு போட வேண்டும்.
இந்த வழிபாட்டினை செய்ய ஆரம்பிக்க மிகவும் உகந்த நாள் தேய்பிறை அஷ்டமி , வாஸ்து நாள் ,பௌர்ணமி தினங்களாகும்.
No comments:
Post a Comment