கொரோனா பரவல் காரணமாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு, அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளனர்.
எத்தனை மதிப்பெண் எடுத்து இருந்தாலும், குறைந்த மதிப்பெண் பெற்றிருந்தாலும் தேர்ச்சி என, ஏற்கனவே தேர்வுத்துறை இயக்குனர் அறிவித்துள்ளார். இந்த நிலையில் நேற்று அனுப்பியுள்ள சுற்றறிக்கை ஒன்றில், காலாண்டு, அரையாண்டு தேர்வை முழுமையாக எழுதாத மாணவர்களுக்கு ஆப்சென்ட் போட வேண்டுமென தெரிவித்துள்ளார். இது ஆசிரியர்கள் மத்தியில் மீண்டும் குழப்பத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment