வீடுகளில் அடிக்கடி மின் தடை 'ஆன்லைன்' வகுப்பு பாதிப்பு: - HEALTH TIPS AND GENERAL NEWS | EDUCATION DEPARTMENT FLASH NEWS |

Home Top Ad

Post Top Ad

https://t.me/joinchat/NY8iCBcU-6hUiJ817Gy1qg

Monday 29 June 2020

வீடுகளில் அடிக்கடி மின் தடை 'ஆன்லைன்' வகுப்பு பாதிப்பு:


சென்னை; சென்னை உட்பட பல இடங்களில், அடிக்கடி ஏற்படும் மின் தடையால், பொது மக்கள் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.
சென்னையில் சில இடங்களில், தரைக்கு அடியில் கேபிள்; மற்ற இடங்களில், மின் கம்பங்கள் வாயிலாக, மின் வாரியம், மின் வினியோகம் செய்கிறது. முழு ஊரடங்குசென்னை உட்பட, வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில், முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

இதனால், மின் தேவை குறைந்தாலும், மின் சப்ளையில் பாதிப்பில்லை. ஆனாலும், சென்னையில், திருவொற்றியூர், எண்ணுார், குரோம்பேட்டை, வேளச்சேரி, ஈஞ்சம்பாக்கம் உள்ளிட்ட பல இடங்களில், அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது.இதேபோல், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களிலும், காலை, இரவில் மின் தடை ஏற்படுகிறது. இதனால், ஆன்லைன் வகுப்புகள் மட்டுமின்றி, வீடுகளில் இருந்தபடி, அலுவலக வேலை செய்வோரும் பாதிப்புக்கு ஆளாகின்றனர். இதுகுறித்து, பாதிக்கப்பட்டவர்கள் கூறியதாவது:பள்ளி, கல்லுாரிகள் செயல்படாத நிலையில், ஆசிரியர்கள்,
மாணவர்களுக்கு, 'ஆன்லைன்' எனப்படும், இணையதளம் வாயிலாக, பாடங்கள் நடத்துகின்றனர்.

'வைபை' வசதிஅதற்கு, அதிவேக இணைய சேவை தேவைப்படுவதால், வீடுகளில், 'வைபை' வசதி செய்யப்பட்டு உள்ளது.தடையில்லாமல் மின்சாரம் இருந்தால் மட்டுமே, இணைய சேவையும் தடையின்றி கிடைக்கும். காலை முதல் மதியம் வரை, இணைய வகுப்புகள் நடக்கின்றன. அந்த சமயங்களில், மின் தடை ஏற்படுவதால் வகுப்புகள் பாதிக்கின்றன.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், 'திடீரென பெய்த மழையால், பல இடங்களில், மின் சாதனங்களில் பழுது ஏற்பட்டது; இதுவே, மின் தடைக்கு காரணம். பழுது ஏற்பட்டால், விரைந்து சரிசெய்து, மின்சாரம் வழங்கப்படுகிறது' என்றார்.

No comments:

Post a Comment

Post Top Ad