ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கு, எழுத்துத்தேர்வில் பெற்ற மதிப்பெண்
அடிப்படையில் பணி நியமனம் நடைபெறாதா? என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை
முதன்மை செயலாளர் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் என்று ஐகோர்ட்டு
உத்தரவிட்டுள்ளது.
ஆய்வக உதவியாளர்
தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் உள்ள ஆய்வகங்களில் 4,362 உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடங்களை நிரப்ப தமிழக பள்ளிக்கல்வித்துறை கடந்த மே 31-ந்தேதி தமிழகம் முழுவதும் எழுத்துத்தேர்வு நடத்தியது. இந்த தேர்வில் சுமார் 8 லட்சம் பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதினார்கள்.
இந்தநிலையில், இந்த தேர்வு முறையை எதிர்த்து காஞ்சீபுரத்தை சேர்ந்த சதீஷ் என்பவர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.ஆய்வக உதவியாளர்
தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் உள்ள ஆய்வகங்களில் 4,362 உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடங்களை நிரப்ப தமிழக பள்ளிக்கல்வித்துறை கடந்த மே 31-ந்தேதி தமிழகம் முழுவதும் எழுத்துத்தேர்வு நடத்தியது. இந்த தேர்வில் சுமார் 8 லட்சம் பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதினார்கள்.
இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
ஆய்வக உதவியாளர் பணிக்கு போட்டித்தேர்வு மூலம் ஆட்களை தேர்வுசெய்ய அரசு தேர்வுத்துறை இயக்குனர் வெளியிட்ட அறிவிப்பின் அடிப்படையில், கடந்த மே 31-ந்தேதி தமிழகம் முழுவதும் எழுத்துத் தேர்வு நடந்து முடிந்துள்ளது. இந்த எழுத்துத்தேர்வு, போட்டியில் இருந்து ஆட்களை குறைப்பதற்காக நடத்தப்பட்டுள்ளது.
இடைக்கால தடை
அதாவது எழுத்துத்தேர்வில் பெறப்படும் மதிப்பெண் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது என்றும், நேர்முக தேர்வில் 25 மதிப்பெண்களுக்கு ஒவ்வொருவரும் பெறும் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே ஒரு வழக்கில் பிறப்பித்த தீர்ப்புக்கும், இந்திய அரசியல் சட்டத்துக்கும் எதிரானது. எனவே, இந்த தேர்வு நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும். கடந்த ஏப்ரல் 22-ந்தேதி வெளியிடப்பட்ட தேர்வு அறிவிப்பை ரத்து செய்யவேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
முகாந்திரம் உள்ளது
இந்த மனுவை நீதிபதி டி.அரிபரந்தாமன் விசாரித்து பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-
ஆய்வக உதவியாளர் பணிக்கு கடந்த மே 31-ந்தேதிதான் எழுத்துத்தேர்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இந்த எழுத்துத்தேர்வில் பெறும் மதிப்பெண் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது. நேர்முகத் தேர்வில் பெறப்படும் மதிப்பெண் அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றால், இந்ததேர்வு தகுதி அடிப்படையில் நடைபெறாது என்று கூறுவதற்கு முகாந்திரம் உள்ளதாக கருதுகிறேன்.
மேலும் மனுதாரர் தரப்பு வக்கீல், ‘ஆய்வக உதவியாளர் பணி என்பது இளநிலை உதவியாளர் பணிக்கு இணையானது. இளநிலை உதவியாளர் பணிக்கு டி.என்.பி.எஸ்.சி. எழுத்துத்தேர்வு மட்டுமே நடத்தும், நேர்முகத் தேர்வு நடத்தாது. அப்படி இருக்கும்போது அதற்கு நேர்மாறாக ஆய்வக உதவியாளர் பணிக்கு நேர்முகத்தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்வது நியாயமற்றது. மேலும் ஆய்வக உதவியாளர் பணிக்கு வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமே ஆட்களை தேர்வு செய்யவேண்டும் என்று கடந்த 2003-ம் ஆண்டு தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது என்றும் வாதிட்டார்.
பதில் மனு
எனவே, தமிழக பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர், மனுதாரர் கூறுவதுபோல எழுத்துத்தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் பணி நியமன நடவடிக்கை நடைபெறாதா? என்பது குறித்து விரிவான பதில் மனுவை தாக்கல் செய்யவேண்டும். விசாரணையை வருகிற 8-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறேன்.
இவ்வாறு நீதிபதி கூறிஉள்ளார்.
No comments:
Post a Comment