இனி நடைபெறும் தேர்தல்களில் இடது கை ஆட்காட்டி விரலில் தடித்த அளவில் மை தீட்டப்படும் தேர்தல் ஆணையம் அறிவிப்பு: - HEALTH TIPS AND GENERAL NEWS | EDUCATION DEPARTMENT FLASH NEWS |

Home Top Ad

Post Top Ad

https://t.me/joinchat/NY8iCBcU-6hUiJ817Gy1qg

Wednesday 3 June 2015

இனி நடைபெறும் தேர்தல்களில் இடது கை ஆட்காட்டி விரலில் தடித்த அளவில் மை தீட்டப்படும் தேர்தல் ஆணையம் அறிவிப்பு:

தேர்தலின்போது வாக்காளர்கள் ஓட்டுப்பதிவு செய்ததற்கு அடையாளமாக முன்பு இடது கை ஆட்காட்டி விரலில் வட்டம்போன்ற புள்ளி அழியாத மையால் வைக்கப்பட்டது. இது உடனடியாக அழிந்து விடுவதாகவும், கள்ள ஓட்டுபோடுவதற்கு வாய்ப்பாக இருப்பதாகவும் தேர்தல் ஆணையத்துக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து சிறிய கோடுபோல் ஆட்காட்டி விரலில் மை வைக்கும் முறையை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்தது.
இந்த மைக் கோடும் உடனடியாக அழிந்து விடுவதாக ஏராளமான புகார்கள் தேர்தல் ஆணையத்துக்கு வந்தன. எனவே, வாக்காளர்களுக்கு மை வைக்கும் முறையை இனி நடைபெறும் தேர்தல்களில் மாற்றுவதற்கு தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

இது குறித்து தலைமை தேர்தல் ஆணையம் சமீபத்தில் பிறப்பித்த உத்தரவில், ‘‘வாக்காளர்களுக்கு இடது கை ஆட்காட்டி விரலின் மேற்பகுதியில் இருந்து அடிப்பகுதி வரை ஒரு சிறிய பிரஷின் உதவியுடன் சிறிய பட்டை தீட்டப்படும். இது தற்போது வைக்கப்படும் அடையாள கோட்டைவிட சற்று தடித்து இருக்கும்’’ என்று கூறப்பட்டு உள்ளது.
அடையாள மை பிரஷால் தீட்டப்பட்டு உள்ளதா? என்பதை ஓட்டுச் சாவடியில் இருக்கும் தேர்தல் அதிகாரி, வாக்காளர் தனது வாக்கை பதிவு செய்வதற்கு முன்பாக உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும் என்றும் அதில் கூறப்பட்டு இருக்கிறது.
இது தொடர்பாக அடையாள மையை தயாரிக்கும் மைசூர் பெயிண்ட்ஸ் அண்ட் வார்னிஷ் நிறுவனத்திடம், அடையாள மையை விநியோகம் செய்யும்போது அதனுடன் மையை தீட்டுவதற்கான பிரஷ்களையும் தேர்தல் நடக்கும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பி வைப்பதை உறுதி செய்யவேண்டும் என்று தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad