நோய் எதிரிப்பு சக்தியை அதிகரிக்கும் பானம்: - HEALTH TIPS AND GENERAL NEWS | EDUCATION DEPARTMENT FLASH NEWS |

Home Top Ad

Post Top Ad

https://t.me/joinchat/NY8iCBcU-6hUiJ817Gy1qg

Friday 21 May 2021

நோய் எதிரிப்பு சக்தியை அதிகரிக்கும் பானம்:

நோய் எதிரிப்பு சக்தியை அதிகரிக்கும் பானம்
நோய் எதிரிப்பு சக்தியை அதிகரிக்கும் பானம்
இந்த எதிரிப்பு சக்தியை அதிகரிக்கும் பானம் நம் உடலில் நோயால் அழியும் செல்களை பாதுகாத்தல், வயதாகுவதை தடுத்தல், உடல் ரீதியாகவும் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. இது உங்க உடலில் உள்ள நோயெதிரிப்பு சக்தியை அதிகரிப்பதன் மூலம் நோய்களுக்கு காரணமான கிருமிகளை எதிர்த்து போராடுவதற்கு உங்க உடலை தயார் செய்கிறது. இந்த பானங்களை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் போதும். இரவில் ஊற வைத்த - 10 பாதாம் பருப்பு (தோல் நீக்கியது)
இரவில் ஊற வைத்த -  5 பேரீச்சம் பழம் (விதை நீக்கியது)
பசும் பால் - 1 கப்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
ஏலக்காய் - 1/8 டீஸ்பூன்
நெய் - 1 டீஸ்பூன்
தேன் - 1 டீஸ்பூன்

நோய் எதிரிப்பு சக்தியை அதிகரிக்கும் பானம்

செய்முறை :

மிக்ஸி ஜாரில் ஊற வைத்த பாதாம் பருப்பு, பேரிச்சம்பழம், மஞ்சள் தூள், ஏலக்காய் தூள், நெய், பால் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். 2-3 தடவை அரைத்து நன்றாக வழுவழுப்பாக அரைத்துக் கொள்ளுங்கள்.

அரைத்த கலவையை ஒரு கிளாஸில் ஊற்றி அதில் தேன் கலந்து கொள்ளுங்கள். இதோ உங்களுக்கான நோயெதிரிப்பு பானம் ரெடி.

இந்த பானத்தை தினமும் குடித்து வரலாம். உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

No comments:

Post a Comment

Post Top Ad