TNPSC: மீன்வள உதவி ஆய்வாளர் தேர்வு முடிவுகள் வெளியீடு: இம்மாதம் 30ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு
தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 11ம் தேதி
மீன்வள உதவி ஆய்வாளர் மற்றும் கடல் சார்ந்த காலிப் பணியிடங்களுக்கு தேர்வு
நடத்தியது. இத்தேர்வில் 1529 பேர் பங்கேற்றனர்.
இந்த தேர்வு முடிவுகள் தற்போது டி.என்.பி.எஸ்.சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு விதி மற்றும் அப்பதவிகளுக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில், நேர்காணல் தேர்விற்கு முன் நடைபெறும் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தற்காலிகமாகத் தெரிவு செய்யப்பட்ட 48 விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் ஆகியவை, தேர்வாணைய இணையதளமான “www.tnpsc.gov.in”-ல் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் சான்றிதழ் சரிபார்ப்பு 30.06.2017 அன்று தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தேர்வு முடிவுகள் தற்போது டி.என்.பி.எஸ்.சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு விதி மற்றும் அப்பதவிகளுக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில், நேர்காணல் தேர்விற்கு முன் நடைபெறும் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தற்காலிகமாகத் தெரிவு செய்யப்பட்ட 48 விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் ஆகியவை, தேர்வாணைய இணையதளமான “www.tnpsc.gov.in”-ல் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் சான்றிதழ் சரிபார்ப்பு 30.06.2017 அன்று தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment