Flash News: 37 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன்
*பள்ளிக்கல்வித்துறையில் 37 அறிவிப்புகளை பேரவையில் வெளியிட்டார் அமைச்சர் செங்கோட்டையன்.*
*மாணவியர் பயிலும் 5,639 அரசு உயர்நிலை & மேல்நிலைப் பள்ளிகளுக்கு நாப்கின் & எரியூட்டும் இயந்திரம் வழங்கப்படும்.*
*தனியார்பள்ளிகளில் கட்டாயக் கல்வி திட்டத்தின் கீழ் மாணவர்களை சேர்க்க நவம்பர் வரை கால அவகாசம் நீட்டிப்பு.*
*மலைப்பகுதிகள், கிராமப்புறங்களில் 30 தொடக்கப் பள்ளிகள் அமைக்கப்படும்.*
*தமிழகத்தில்உள்ள அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் யோகா நடைமுறைப்படுத்தப்படும்.*
*பொறியியல், மருத்துவ படிப்பு நூல்களை தமிழாக்கம் செய்து வெளியிட அரசு திட்டமிட்டுள்ளது.*
ஆசிரியர் காலிப்பணியிடம் விரைவில் நிரப்பப்படும் , ஓய்வூதிய திட்டம், அரசின் பரிசீலனையில் உள்ளது: எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு கல்வி அமைச்சர் பதில்!
பேரவையில் இன்று நடைபெற்ற கேள்வி நேரத்தில் பேரவை உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ,
#ஆசிரியர் காலிப்பணியிடம் விரைவில் நிரப்பப்படும்.
#கணிணி ஆசிரியர்கள் நியமனம் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும்.
என்று மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பேரவையில் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment