50 Tips for Anyone Building a New Construction Home | Dengarden: - HEALTH TIPS AND GENERAL NEWS | EDUCATION DEPARTMENT FLASH NEWS |

Home Top Ad

Post Top Ad

https://t.me/joinchat/NY8iCBcU-6hUiJ817Gy1qg

Wednesday 26 October 2016

50 Tips for Anyone Building a New Construction Home | Dengarden:

சொந்த வீடு கட்டுவோர்க்கு 50 டிப்ஸ்கள்..!

1. பத்திரப்படுத்திவச்சுக்கங்க..
2. வீடுகட்டும்போது தண்ணீர், அஸ்திவாரம், சிமெண்ட், செங்கல், ஃப்ளோர், பெயிண்ட் என வீட்டின் ஒவ்வொருகட்டுமான அம்சத்திலும் நம் ஆலோசனை மற்றும்கண்காணிப்பு இருக்குமாறு பார்த்துக் கொள்வது, வீட்டின் குவாலிட்டியைக் கூட்டும்.
தண்ணீர்:
3. தண்ணீரின்தரம் மிக முக்கியம். அதிகஉப்பு உள்ள தண்ணீரில் வீடு
கட்டினால், கட்டுமானம் மெள்ள மெள்ள அரி
மானத்துக்குஉள்ளாகும். அதற்காக குடிநீரில் வீடுகட்ட வேண்டும் என்றில்லை. அதிகம் உப்பில்லாமல் இருப்பதுஅவசியம்.

4. தண்ணீர்தேவைகளுக்காக ஆழ்துளைக் கிணறு அமைத்து, நீர்மூழ்கிமோட்டார்களைத் தேர்ந்தெடுக்கும்போது சில விக்ஷயங்களில் உஷாராகஇருக்க வேண்டும். தண்ணீர் கொஞ்சம் கூடஉட்புக வாய்ப்பில்லாத மோட்டார் பம்புகளையே தேர்ந்தெடுக்க வேண்டும். அப்போதுதான் மின்கசிவால் பிரச்சனை இருக்காது.
5. இப்போதெல்லாம்அதிகபடியான வெப்பத்தைத் தாக்குப் பிடிக்கும் மோட்டார்கள் மார்க்கெட்டில் உள்ளன. வெப்பம்
அதிகமாகிவிட்டதுஎன்பதை உணர்த்தும் அலாரம் பொருத்தப்பட்ட மோட்டார்களைப்பொருத்திவிட்டால் அடிக்கடி ரிப்பேர் ஆவது தடுக்கப்படும்.
6. வெப்பத்தைஉணர்ந்து மின் இணைப்பை தானேதுண்டித்து விடும் வகையிலான ஏற்பாடுடையமோட்டார்களைப் பொருத்துவது புத்திசாலித்தனம்.
சிமெண்ட்:
7. தரமானசிமெண்ட்டால்தான் வலுவான கட்டடத்தை உறுதிசெய்ய முடியும். அந்தத் தரத்தை சிமெண்டின்நிறத்தைப் பார்த்தே ஓரளவு யூகித்துவிட முடியும். லேசான பசுமை நிறத்தில் இருப்பதுநல்ல சிமெண்ட்.
8. மூட்டைக்குள்இருக்கும் சிமெண்ட்டுக்குள் கையை விடும்போது சிலுசிலுவென்றுகுளுமையாக இருக்க வேண்டும். தண்ணீர்இருக்கும் வாளிக்குள் சிமெண்ட்டைப் போடும்போது அது மிதந்தால் தரத்தில்கோளாறானது என்று அர்த்தம். அதேபோல்தட்டி இருந்தாலும் தரமற்றது.
9. சிமெண்ட்மூட்டையின் அளவு 50 கிலோ இருக்கவேண்டும். எடை வேறுபாடு ஒருகிலோ வரை அனுமதிக்கலாம். அதற்குமேல் போனால், உரிய வகையில்விசாரித்து ஒழுங்கான அளவுள்ள மூட்டைகளைப் பெறுவதற்கானமுயற்சிகளில் இறங்குங்கள்.
மணல் :
10. மணலில்அதிக தூசு துரும்பு இல்லாமல்இருக்க வேண்டும். அதிக அளவு வண்டல்கலந்திருந்தால் அதன் நிறமே காட்டிக்கொடுத்துவிடும்.
11. மணலின்மொத்த எடையில் 8% வண்டல் இருந்தால் பயன்படுத்தலாம். பார்வையாலேயே இதைக் கண்டுபிடித்துவிட முடியும். அதற்கு மேல் இருந்தால் பயன்படுத்துவதைத்தவிர்க்கவும்.
12. கடல்மணலைக் கொடுத்து ஏமாற்றும் வேலைகள் நடக்கின்றன. அந்தமணலைக் கொஞ்சம் வாயில் எடுத்துப்போட, உப்புக் கரித்தால் அதுகடல் மணல். இந்த மணலைபயன்படுத்திக் கட்டப்படும் சுவர்கள் பெரும்பாலும் ஈரமாகவே இருக்கும். சீக்கிரம்உதிர்ந்துவிடும். மழை பெய்தால் சீக்கிரம்அரித்து விடும். ஆகையால். கடல்மணலுக்கு கண்டிப்பாக நோ சொல்லிவிடுங்கள்.
13. மணலில்தவிடு போல் நொறுங்கிப் போகக்கூடியசிலிக்கா
அதிகம்இருந்தாலும் பயன்படுத்தக் கூடாது. ஏனென்றால், இதுசிமென்ட்டுடனான பிணைப்பை உறுதியாக உருவாக்காது.
இரும்புக்கம்பிகள் :
14. கான்கிரீட்டுக்குவலு சேர்க்க இரும்புக் கம்பிகள்பயன்படுத்தப்படுகின்றன. இதற்கு எந்த வகைஇரும்புகளைப் பயன்படுத்தினாலும் சில விஷயங்களைக் கவனத்தில்கொள்ள வேண்டும்.
15. ஆலையில்இருந்து தயாரிக்கப்பட்டு வரும் கம்பிகள், பட்டைகள், சட்டங்கள், சுருள்கள் போன்றவற்றில் சிறு பிசிறுகள் இருக்கக்கூடும். இவற்றை அகற்றிய பின்னரே பயன்படுத்தவேண்டும்.
16. இரும்பின்மேல் கொஞ்சம் கூட துருஇருக்கக் கூடாது. அடையாளங்களுக்காக சிறுஅளவில் பெயிண்ட் தடவப்பட்டாலும் நீக்கிவிட வேண்டும். எண்ணெய், அழுக்கு, பிசுக்கு, சேறு, மண், மணல்போன்ற எந்த வித அசுத்தமும்இருக்கக் கூடாது. அப்படி இருந்தால்பிணைப்பு வலுவில்லாமல் போய்விடக் கூடும்.
செங்கல்:
17. வீட்டின்உறுதியை நிர்ணயிப்பதில் செங்கற்களுக்கு பிரதான இடம் உண்டு. பாரம்பரிய முறையிலான சூளை மற்றும் நவீனமுறையிலான சேம்பர் என இரண்டுவகையில் செங்கற்கள் தயாரிக்கப்படுகின்றன. இரண்டு தயாரிப்புகளையுமே வாங்கிப்பயன்படுத்தலாம்.
18. செங்கல்தரமானதாக இருக்கிறதா என்பதைக் கண்டறிய நாலைந்து செங்கற்களைஎடுத்து 24 மணி நேரம் நீரில்ஊறப்போட வேண்டும். பிறகு, விரலால் சுரண்டிப்பாருங்கள் பிசிறு பிசிறாக வந்தால்தரம் குறைவான செங்கல் என்றுஅர்த்தம்.
19. இப்போதெல்லாம்இன்டர்லாக் செங்கல்கள்என்றொரு வகையும் பயன்பாட்டில்இருக்கிறது. நிலக்கரி சாம்பல், சுண்ணாம்பு, ஜிப்சம் கலந்து தயாரிக்கப்படும்இந்தக் கல் ஒன்றின் விலை16 முதல் 20 ரூபாய் வரை நிர்ணயிக்கப்படுகிறது. இந்தக் கல், மூன்று செங்கற்களுக்குஇணையானது. வேலையைச் சுலபமாக்கும்.
20. கட்டுமானப்பொருட்களின் சேதாரத்தை குறையுங்கள். கொண்டு வரும்போதோ, கையாளும்போதோ, பயன்படுத்தும்போதோ ஆகும் சேதாரத்தில் மட்டும்5 சதவீத கட்டுமானப் பொருட்கள் வீணாகிவிடும். நீங்கள் களத்தில் இருந்தால்தான்இந்த சேதாரத்தை கண்காணிக்க முடியும். அலுவலகத்திற்கு விடுமுறை போட்டால் லாஸ் ஆஃப் பேஆயிற்றே என நீங்கள் கணக்குப்போட்டால் இங்கு அதைவிட அதிகஅளவு பொருட்கள் நட்டமாகும்.
21. கான்ட்ராக்டரிடம்வேலையை ஒப்படைக்கும் போது அவரது முந்தையவேலைகள், அவருக்கும், அவரது தொழிலாளர்களுக்கும் இடையேஉள்ள நல்லுறவு, அவரது வளைந்து கொடுக்கும்தன்மை, எல்லாவற்றையும் விட நேர்மை ஆகியவற்றைவிசாரியுங்கள்.
22. மூலப்பொருட்களை ஒரேயடியாக வாங்கி ஸ்டாக் வைத்துக்கொள்வது தவறு. கட்டுநர்களுக்கு இதுசரியானது. ஆனால், முன்கூட்டியே ஒருபெரிய அளவிலான கட்டுமானப் பொருட்களைவாங்குவதன் மூலம் நமது பணம்மறைமுகமாக ஒரே இடத்தில் முடக்கப்படுகிறது.
23. அதேசமயம் அவ்வப்போது பொருட்களை வாங்கினால், அன்றன்றைய சந்தை நிலவரம் பொறுத்துதான்நாம் பொருட்களை வாங்க முடியும். இதற்குஎன்ன வழி? முன்கூட்டியே, பின்தேதியிட்ட காசோலைகளை டீலர்களிடம் கொடுத்துவிட்டு, அந்தந்த தேதியில்தேவையான பொருட்களைஇன்றைய மார்க்கெட் விலைக்கு இறக்கும்படி ஒப்பந்தம் செய்து கொள்ளுங்கள்.
24. சமீபத்தியதொழிற்நுட்பங்களையும், நவீன கட்டுமானப் பொருட்களையும்பயன்படுத்துவதன் மூலம் நேரமும் கூலியும்மிச்சமாகும்.
25. செங்கற்களுக்குமாற்றாக வந்துள்ள கட்டுமானக் கற்களை பயன்படுத்தலாம். இதுவிலையும் குறைவு, சேதாரமும் குறைவாகும்.
26. மரவேலைகள் நமது கட்டுமானச் செலவைபெரிதும் கபளீகரம் செய்யக்கூடியவை. எங்கள் வீட்டு வாசற்கதவுமட்டுமே 1 லட்ச ரூபாய் ஆனதுஎன எத்தனை நாள் சொல்லிக்கொண்டிருப்பீர்கள்?. குறைந்தபட்சம் கிரகப்பிரவேச நாளில் இருந்து 10 நாட்கள்சொல்லப் போகிறீர்கள். அதற்கு ஏன் 1 லட்சரூபாய் ஃபீஸ் தரவேண்டும்?.
27. எல்லாவேலைகளுக்கும் மரத்தையே நாடாமல், UPVC மற்றும் அலுமினிய ஜன்னல்கதவுகளைப் பயன்படுத்துங்கள். மர லுக்கினைத் தரும்ஸ்டீல் கதவுகளைக் கூட நாம் பயன்படுத்தலாம்.
28. பரண்அமையும் இடத்தில் அதனுடைய தொடர்ச்சியாக சுவற்றின்வெளிப்புறத்தில் சன்க்ஷேடுகளை அமைத்தால் செலவு குறையும்.
29. ஆற்றுமணலை வெளியில் ஒரு வார காலம்போட்டு வைத்து, பின்பு அதனைகசடுகள் நீக்கி, சலித்து பயன்படுத்துவதற்குபதில், நன்றாக பேக் செய்யப்பட்டM.சேண்டை பூச்சு வேலைக்குப் பயன்படுத்தலாம். சென்னை போன்ற நகரங்களில் வசிப்பவர்களுக்குஆற்று மணலைவிட M.சேண்ட் விலைகுறைவானது என்பதுகுறிப்பிடத்தக்கது.
30. க்ஷட்டரிங்பிளைவுட் கொண்டு சென்ட்ரிங் செய்யும்பட்சத்தில், சீலிங் பூச்சு வேலைமுற்றிலும் தவிர்க்கலாம். இதன் மூலம் 1000 சதுரஅடி கட்டிடத்தில் ரூ.30,000 வரை மிச்சப்படுத்தலாம்.
31. எந்தவேலைக்கு, எந்த அளவிலான கம்பிஎன்பதை பொஷூயாளர் மூலமாக பார் பென்டருக்குஉணர்த்திவிடுங்கள். பொதுவாக அஸ்திவாரம், பில்லர்கள், தளங்கள் இந்த வேலைகளின் போதுதான்பொறியாளர்களின் பேச்சை பார்பென்டர்கள் கேட்கிறார்கள். ஸ்லாபு போன்ற மற்ற வேலைகளுக்குஅதிக அளவில் கம்பிகள் செலவாவதைநாம் தடுக்க வேண்டும்.
32. முடிந்தஅளவு மறுசுழற்சிப் பொருட்களை பயன்படுத்த முன்வர வேண்டும். பழையபொருட்களாயிற்றே என்ற தயக்கத்தை நீங்கள்களைந்தால், கணிசமான அளவு பணத்தைமிச்சம் செய்யலாம்.
33. உங்களதுபுராஜெக்டு நடத்தும் இடத்தைச் சுற்றி வலுவான காவலைஏற்படுத்திக் கொள்ளுங்கள். இன்றைய நிலையில் கட்டுமானப்பொருட்களைவிட காஸ்ட்லியானது எதுவுமில்லை.
34. தேவையற்றபார்ட்டீசியன் சுவர்களுக்கு அதிக கனமுடைய சுவர்களைஅமைக்காதீர்கள்.
35. கட்டுமானப்பணிமுடியும் வரை, செங்கல், சிமெண்ட், ரசாயனங்கள் போன்ற கட்டுமானப் பொருட்களைகவனமாகக் கையாளுங்கள்.
36. செலவானாலும்பரவாயில்லை என்று தரமிக்க மின்கேபிள்கள், மின் சாதனங்களையே வாங்குங்கள். இது ஒன்டைம் இன்வெஸ்ட்மென்ட்தான். இதற்குப் பிறகுஆகும் மின் செலவை இதுபெருமளவு குறைக்கும்.
37. நான்பிராண்டட் பெயிண்ட்களை உங்கள் கட்டுமானத்
திற்குப்பயன்படுத்தாதீர்கள். தரமற்ற பெயிண்ட்கள் உங்கள்பர்ஸை சிக்கனப்படுத்தும். ஆனால், கட்டிடத்தை நீண்டகாலம்பாதுகாக்காது.
38. வீட்டைசுற்றிலும் முறைப்படி அளந்து, எல்லைகளை கவன
மாக வேலியிட்டு பாதுகாத்துக் கொள்வது சிறந்தது.
39. சிமெண்ட்கட்டிட சாமான்கள், கருவிகள் இவற்றை பாதுகாக்க ஒருசிறிய குடோன் அமைப்பது நல்லது.
40. கட்டுமானபணிக்காக முதலில் குடிநீர் தொட்டிகட்டிக் கொள்வது நல்லது அல்லதுசெப்டிக் டேங்க் கட்டி, கட்டிடவேலைக்கான நீர் தொட்டியாக பயன்படுத்திக்கொள்ளலாம்.
41. போர்வெல்போட்டு, மின் இணைப்பு பெற்றபிறகு, கட்டிட வேலையை துவங்குவதுவரவேற்கத்தக்கதாகும்.
42. அதிநவீன கட்டுமான நுட்பங்கள், பொருட்களை பயன்படுத்திக் கொள்ளுதல், மிக பிரபலமாகி வரும்ரெடிமிக்ஸ் கான்கிரீட்டுகள் போன்ற அதிநவீன கட்டுமானவசதிகளை பயன்படுத்திக் கொண்டால் கட்டுமான காலம், நேரம் குறையும்.
43. அஸ்திவாரம்போட மண்வெட்டி எடுத்த உடனே மண்ணின்தன்மை தரம் பற்றி பரிசோதித்துஇந்த இடத்திற்கு ஏற்ற அஸ்திவார முறையைபொறியாளர் அறிவுரையுடன் முடிவு செய்ய வேண்டும்.
44. பேஸ்மெண்ட்லெவல் கட்டி முடித்த பிறகுசாலையின் உயரத்திற்கும், வீட்டின் உயரத்திற்கும் பொருத்தமான அளவில் கட்டிடத்தை உயர்த்தவேண்டும்.
45. லிண்டல்லெவல் வந்த பிறகு, போர்ட்டிகோ. சிட் அவுட், சன்க்ஷேஷட் பொருட்கள்வைக்க, சுவரின் பக்கவாட்டில் உயரத்தில்லக்கேஜ் லாஃப்ட், சுவற்றிற்குள் வைக்கக்கூடிய ஒயர்களுக்கு இட அமைப்பு பற்றிபொறியாளருடன் ஓர் ஆய்வு செய்யவேண்டும்.
கீழ்க்கண்டவிவரங்களை தெரிந்து கொள்ளல் அவசியம் :
46. ரூஃப்லெவல் முடிந்த பிறகு எலெக்ட்ரிக்ஸ்விட்ச் பாக்ஸ் அமைவிடங்கள் கண்ட்ரோல்பேனலுக்கு இடம் குறித்து ஆய்வுஎதிர்காலத்தில் கூடுதலாக மின்வசதி தேவைப்பட்டால் அதற்கான ஸ்விட்ச் பாக்ஸ்அமைவிடங்கள் பற்றிய விவரங்கள்.
47. கதவு, நிலவு, ஜன்னல்கள் ஆகியவற்றிற்குத் தேவையான மரங்கள் அலுமினியஸ்டீல் கிரில்கள், ஃபர்னிச்சர் ஃபிட்டிங்ஸ், பூட்டுகள், கைப்பிடிகள், அலமாரிகள், ரூம் தடுப்புகள், வெண்ட்டிலேட்டர்அமைப்புகள், உள் அலங்கார பொருட்களுக்கானஅமைவிடங்கள் பற்றிய அனைத்து விவரங்கள்.
48. தளத்திற்குமொசைக் மார்பிள்ஸ், செராமிக் டைல்ஸ், சுவரில் பதிக்கும்டைல்ஸ், அலங்காரக் கூரை, ஓடுகள், பளபளக்கும்சமைலயறைப் பலகைகள், ஸ்டோர் ரேக்ஸ் பலகைகள்பற்றிய விவரங்கள்.
49. வண்ணப்பூச்சுஉட்புறத்துக்கு ஏற்ற வண்ணம், வெளிச்சுவர்களுக்குரியவண்ணம் கேட் டிசைனில் இருக்கவேண்டும். என்ன வண்ணம் அடிக்கலாம்என்பதைப் பற்ஷூய விவரங்கள்.
50. உள்அலங்கார அறையின் உள் அலங்காரஅமைப்பிலும் அந்த அறையின் தன்மைக்கேற்பவண்ணமும், உள் அலங்காரமும் இருப்பதுபற்றிய விபரங்கள்.
/M. ராஜேந்திரன், திண்டுக்கல்/

No comments:

Post a Comment

Post Top Ad