கல்வியில் சிறந்து விளங்குவதற்காக, மாணவர்களை ‘தினத்தந்தி’ ஊக்குவித்து வருகிறது.
‘‘தினத்தந்தி கல்வி நிதி’’
பொருளாதார ரீதியில் பின்தங்கிய எஸ்.எஸ்.எல்.சி. மாணவ-மாணவி களை ஊக்குவித்து, அவர்கள் மேல்படிப்பை தொடர்வதற்கு வசதியாக, ‘‘தினத்தந்தி கல்வி நிதி’’ என்ற புதிய திட்டத்தை தினத்தந்தி தொடங்கி இருக்கிறது.
இந்த திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் மாவட்டத்திற்கு 10 மாணவ- மாணவிகள்
வீதம் 340 பேர் (புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்பட) தேர்வு செய்யப்பட
உள்ளனர்.‘‘தினத்தந்தி கல்வி நிதி’’
பொருளாதார ரீதியில் பின்தங்கிய எஸ்.எஸ்.எல்.சி. மாணவ-மாணவி களை ஊக்குவித்து, அவர்கள் மேல்படிப்பை தொடர்வதற்கு வசதியாக, ‘‘தினத்தந்தி கல்வி நிதி’’ என்ற புதிய திட்டத்தை தினத்தந்தி தொடங்கி இருக்கிறது.
ரூ.34 லட்சம்உதவித்தொகை
34 மாவட்டங்களுக் கும் மொத்த உதவித்தொகையாக ஆண்டு தோறும் ரூ.34 லட்சம் வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான கல்வி நிதியை பெற, 2014-2015-ம் கல்வி ஆண்டில் நடைபெற்ற எஸ்.எஸ்.எல்.சி. அரசு பொதுத்தேர்வில், 375 மற்றும் அதற்கு கூடுதலான மதிப்பெண்கள் பெற்று இருக்க வேண்டும்.
பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்து 40 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும்.
விதிகள் மற்றும் நிபந்தனைகள்
விண்ணப்பிக்கும் மாணவர்கள் தமிழை ஒரு பாடமாக எடுத்து படித்து இருக்க வேண்டும்.
விண்ணப்பத்துடன் மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் பட்டியல், வருமானச் சான்றிதழ், குடும்ப அட்டை ஆகியவற்றின் நகல்களுடன் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களை அனுப்பி வைக்க வேண்டும்.
இதற்கான விண்ணப்ப படிவம் இன்றைய ‘தினத்தந்தி’யின் 5-ம் பக்கம் பிரசுரிக்கப்பட்டு உள்ளது. அந்த விண்ணப்ப படிவத்தில் மட்டுமே மாணவர்கள் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். ஜெராக்ஸ் நகல் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
தேர்வுக் குழுவின் முடிவே இறுதியானது. அது எந்த ஒரு நீதிமன்றத்தின் பரிசீலனைக்கும் உரியது அல்ல.
20-ந் தேதிகடைசி நாள்
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ‘‘ஆசிரியர், தினத்தந்தி கல்வி நிதி, தினத்தந்தி, 86 ஈ.வி.கே.சம்பத் சாலை, சென்னை-7’’ என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி 20.6.2015.
No comments:
Post a Comment