டெல்லி: கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்டிருக்கும் லாக்டவுன்
நீட்டிக்கப்பட்டால் மே மாதம் இறுதியில் 4 கோடி இந்தியர்களின் கையில்
செல்போன் இல்லாத நிலைமை உருவாகும் என்று இந்தியா செல்லுலார் அண்ட்
எலக்ட்ரானிக்ஸ் அமைப்பு (India Cellular and Electronics Association ICEA)
தெரிவித்துள்ளது.
மே 3ம் தேதிக்கு தயாராக திட்டம்... திடீர் அறிவிப்புக்கு என்ன காரணம்?
கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 40 நாட்கள் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த லாக்டவுன் காலத்தில் அத்தியாவசியப் பொருட்கள் விற்பனைக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தற்போது 5-வது வாரமாக லாக்டவுன் நீடித்து வருகிறது. இந்நிலையில் லாக்டவுன்
தளர்வாக தொலைத்தொடர்பு, இண்டர்நெட் சேவை, தகவல் தொழில்நுட்ப துறை ஆகியவை
இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த தகவல் தொழில்நுட்ப சேவை, இணைய
சேவைக்கான அடிப்படையான செல்போன் சேவை குறித்து எதுவும் சொல்லப்படவில்லை.
மே 3ம் தேதிக்கு தயாராக திட்டம்... திடீர் அறிவிப்புக்கு என்ன காரணம்?
கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 40 நாட்கள் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த லாக்டவுன் காலத்தில் அத்தியாவசியப் பொருட்கள் விற்பனைக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இந்தியா செல்லுலார் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் அமைப்பு ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. இதில், ஒவ்வொரு மாதமும் பொதுவாக 2.5 கோடி புதிய செல்போன்கள் விற்பனையாகி வந்தது. நமது நாட்டில் தற்போது 85 கோடி செல்போன்கள் பயன்படுத்தப்பட்டும் வருகின்றன.
கொரோனா: சிங்கப்பூரில் 12 ஆயிரத்தை தாண்டியது- இலங்கையில் 416; மலேசியா, பாகிஸ்தானிலும் உக்கிரம்!
மளிகை பொருட்கள், மருந்து பொருட்கள் போலவே செல்போன் சேவையையும் அத்தியாவசியப் பட்டியலில் சேர்க்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இது தொடர்பாக பிரதமர் மோடிக்கும் கடிதம் அனுப்பியுள்ளோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment