தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயப் படிப்பு சேர்க்கைக்கு விண்ணப்பிப்பதற்கான
கால அவகாசம் வியாழக்கிழமையோடு (ஜூன் 4) முடிவடைகிறது. மாணவர் சேர்க்கைக்கான
கலந்தாய்வு ஜூலை 1-ஆம் தேதி தொடங்குகிறது.இதுதொடர்பாக மாநில கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம் வெளியிட்ட செய்தி:2015-16-
ஆம் கல்வியாண்டுக்கான தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயப் படிப்பில் மாணவர்
சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வு இணைய வழியில் நடத்தப்பட உள்ளது. இதில்
சேர விரும்பும் மாணவர்கள் வியாழக்கிழமை மாலை 5 மணிக்குள் விண்ணப்பங்களைச்
சமர்ப்பிக்க வேண்டும். கலந்தாய்வு ஜூலை 1-ஆம் தேதி தொடங்கப்படும். முதல்
நாளில் சிறப்புப் பிரிவினரான மாற்றுத்திறனாளிகள், சுதந்திரப் போராட்ட
தியாகிகளின் வாரிசுகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு
கலந்தாய்வு நடத்தப்படும்.
ஜூலை 2-ஆம் தேதி ஆங்கில வழியில் படிக்க
விண்ணப்பித்துள்ளவர்களுக்கும், பிற சிறுபான்மை மொழியில் படிக்க
விண்ணப்பித்துள்ளவர்களுக்கும் கலந்தாய்வு நடத்தப்படும். 3-ஆம் தேதி தொழில்
பிரிவினருக்கும், 4, 6-ஆம் தேதிகளில் கலைப் பிரிவு மாணவர்களுக்கும், 7
முதல் 10-ஆம் தேதி வரை அறிவியல் பிரிவு மாணவர்களுக்கும் கலந்தாய்வு
நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.Wednesday, 3 June 2015
தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயப் படிப்பு: விண்ணப்பிக்க இன்று கடைசி:
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment