தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: தொழில்நுட்ப கல்வி இயக்ககம் மற்றும்
கல்லூரி கல்வி இயக்ககம் கட்டுப்பாட்டில் இருக்கும் அரசு மற்றும் அரசு உதவி
பெறும் பொறியியற் கல்லூரிகள், கலை கல்லூரிகள், தமிழ்நாடு திறந்தநிலை
பல்கலைக்கழகம் போன்றவற்றில் எம்பிஏ மற்றும் எம்சிஏ சேர்க்கைக்கான விண்ணப்ப
படிவங்கள் வரும் 8ம் தேதி முதல் 30ம் தேதி முடிய கல்லூரி வேலை நாட்களில்
காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வழங்கப்படும்.
சென்னையில், தொழில்நுட்ப கல்வி இயக்ககம், கிண்டி
பொறியியல் கல்லூரி, மாநில கல்லூரிகளில் விண்ணப்பம் கிடைக்கும். இதுதவிர
அரியலுர், கோவை, கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம்,
கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாகப்பட்டினம், நாமக்கல்,
பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தஞ்சாவூர்,
நீலகிரி, தேனி ஆகிய மாவட்டங்களில் குறிப்பிட்ட கல்லூரிகளில் விண்ணப்பங்கள்
கிடைக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment