பி.இ., இரண்டாம் ஆண்டில் நேரடியாக சேர்வதற்கான கவுன்சிலிங் காரைக்குடி
அழகப்ப செட்டியார், இன்ஜி., கல்லுாரியில் ஜூன், 30-ல் துவங்கி, ஜூலை 10-
வரை நடக்கிறது.
டிப்ளமா, பி.எஸ்சி., முடித்தவர்கள், பி.இ., இரண்டாம்
ஆண்டில் நேரடியாக சேர்ந்து படிப்பதற்கான விண்ணப்ப வினியோகம், மே 17-ல்
துவங்கியது. ஜூன் 19,- வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 13 ஆயிரத்து, 69 பேர்
விண்ணப்பித்தனர். இவர்களுக்கான கவுன்சிலிங் வரும், 30-ல்
துவங்குகிறது.பி.இ., இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கை செயலர், இளங்கோ
கூறியதாவது:சிறப்பு பிரிவினருக்கான கவுன்சிலிங், 30ம் தேதி காலை, 9:30
மணிக்கு துவங்குகிறது. அன்றே லெதர் மற்றும் பிரின்டிங் பிரிவுக்கும்,
மறுநாள் கெமிக்கல், டெக்ஸ்டைல் பிரிவுக்கும் நடக்கிறது. ஜூலை,1 முதல் 3ம்
தேதி வரை சிவில், 3 - 7ம் தேதி -வரை மெக்கானிக்கல், 7 - 10ம் தேதி வரை
எலக்ட்ரிக்கல் அன்ட் எலக்ட்ரானிக்ஸ் பிரிவுக்கும், 10ம் தேதி
பி.எஸ்சி.,க்கும் நடக்கிறது.காரைக்குடி புது பஸ் ஸ்டாண்டிலிருந்து,
கவுன்சிலிங் நடக்கும் இடமான அழகப்பா இன்ஜி., கல்லுாரி வரை போக்குவரத்து
கழகம் சார்பில் சிறப்பு பஸ் இயக்கப்படுகிறது.
No comments:
Post a Comment